search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகம் மீட்பவருக்கு ஊக்கத்தொகை ரூ.1 லட்சம்
    X

    ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகம் மீட்பவருக்கு ஊக்கத்தொகை ரூ.1 லட்சம்

    • சீராய்வு கூட்டத்தில் தீர்மானம்
    • குமரி மாவட்ட கோவில்களுக்கு சொந்தமானது

    நாகர்கோவில் :

    சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்தில் திருக்கோவில் அலுவலக கண்காணிப்பாளர்கள், மேலாளர்கள், ஸ்ரீகாரி யங்கள், கோவில் பணியா ளர்களுக்கான சீராய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருக்கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் திருமண மண்டபங்களை கட்டுதல், வழிபாடு மற்றும் திருமண கட்டணத்தை உயர்த்துவது, புதிய வணிக வளாகம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்து தல், தனி நபரிடம் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கோவில் பணியாளர்கள் யார் அதிக அளவில் மீட்டு தரு கின்றார்களோ அவர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக தமிழக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் வழங்கப்படும்.

    ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு, கடைகள் வைத்திருப்ப வர்களுக்கு உரிய கட்டண முறை வசூல் செய்வது, தொகுப்பூதியத்தில் கூடு தலாக அடிப்படை பணி யாளர்களை நியமனம் செய்வது, சிதல மடைந்த திருக்கோவில்களில் திருப் பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் திருக்கோவில் நிர்வாக பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×