search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஊழியர் பலி
    X

    மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஊழியர் பலி

    • மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மதுரை மேலூரில் மின்சார ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலூர் பகுதியில் ஒரு மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மின் ஊழியர் ஷாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் ஷாஜியின் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இவரின் சொந்த ஊரான திருவட்டாரில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று மாலை அடக்கம் செய்ய ப்பட்டது.

    Next Story
    ×