search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே குளியல் அறையில் மயங்கி விழுந்து மின் ஊழியர் சாவு
    X

    மண்டைக்காடு அருகே குளியல் அறையில் மயங்கி விழுந்து மின் ஊழியர் சாவு

    • குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கேயே மயங்கி தண்ணீர் குழாய் மீது விழுந்து கிடந்தார்
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு அருகே அழகன்பாறை குன்னங் காடை சேர்ந்தவர் சிவன் (வயது 54).

    இவர் தக்கலை அருகே மூலச்சல் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை சிவன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் வழக்கம்போல் மருந்து வாங்கும் தனியார் மருத்துமனைக்கு சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. அதனால் மாலை மருந்து வாங்கலாம் என வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார்.

    இந்நிலையில் மதியம் குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கேயே மயங்கி தண்ணீர் குழாய் மீது விழுந்து கிடந்தார். அவரது சப்தம் கேட்டு வீட்டினர் குளியலறைக்கு சென்று, அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி விஜி (48) மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×