search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து தற்கொலைகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்
    X

    அனைத்து தற்கொலைகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்

    • சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரிகளில் நடந்தது

    திருவட்டார் :

    சமத்துவ மக்கள் கட்சியின் குமரி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் குலசே கரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ யராஜ் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அமலன், குமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கால்டுவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செய லாளர் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ரமேஷ் ஆன்றனி, விணு, பால்ராஜ், குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநி லங்களுக்கு கனிம வளங்கள் வெட்டி கொண்டு செல் வதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். காலை, மாலை பள்ளி, கல்லூரி களுக்கு மாணவ-மாணவி கள் செல்லும் நேரங்களில் கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு அதிவேக மாக டாரஸ் லாரிகள் செல்கிறது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. மேலும் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாண விகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்ல முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாக னங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.

    குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் இதுவரை பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும். கல்லூரியில் போலி இருப்பிட சான்று களுடன் படிக்கும் வெளிமாநிலத்தவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    கல்லூரி நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை களை மீட்க நடவடிக்கை எடுக்க வே ண்டும். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்க ளில் கொண்டுவந்து கொட்டு வதை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.

    Next Story
    ×