search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே ஆக்கர் வியாபாரி தற்கொலை
    X

    மண்டைக்காடு அருகே ஆக்கர் வியாபாரி தற்கொலை

    • மது அருந்தும் பழக்கம் இருந்த ஜெயராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
    • அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    குளச்சல், நவ. 27-

    மண்டைக்காடு அருகே காரியாவிளை வட்டக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 53).வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊர் திரும்பி உடையார்விளை பகுதியில் ஆக்கர்கடை நடத்தி வந்தார்.

    மது அருந்தும் பழக்கம் இருந்த ஜெயராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 21-ந் தேதி ஜெயராஜ் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து அவரது மனைவி சகிதா மிஸ்ரயேல், குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×