search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க.வினர் பேரணி
    X

    ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க.வினர் பேரணி

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • பேரணி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி காமராஜர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது

    கன்னியாகுமரி :

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. எழுச்சி பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேரணி நடத்தினர்.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். பேரணியை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், தாழக்குடி ரோகினி அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம் பிள்ளை, நகர அவைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் நவமணி, வளர்மதி, சுடலலையாண்டி, மோகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகி சங்கரலிங்கம், பேரவை சுந்தரம் பிள்ளை, நகர இணை செயலாளர் பேச்சியம்மாள், கச்சேரி நாகராஜன், சிவசங்கரன், மல்லிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி காமராஜர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் கையில் மாநாடு குறித்து விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி சென்றனர்.

    Next Story
    ×