என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்
    X

    தக்கலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்

    • பி.டி.செல்லப்பன் தலைமையில் நடந்தது
    • கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி :

    கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளையில் சம்பந்தப் பட்டவர்களை விரைவில் கைது செய்யகோரி தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது.

    குமரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.டி.செல்ல ப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கமணி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சுரேஷ் பிரகாஷ், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் வீரவேணாடன் ராஜா, பத்மநாபபுரம் நகர செயலாளர் டேனியல், ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    அமைப்பு செயலாளர் கோலப்பன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் ஜெங்கின்ஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகர், குமரி மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் ஸ்டீபன், குமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்றோஸ், மாவட்ட துணை செயலாளர் உஷா, மாவட்ட அணி செயலாளர்கள் ரெஞ்சன், குமார், சாந்தகுமார், ராஜேஸ், சுஜாதா, நாதன், லூக்காஸ், பெனட்ராஜன்.

    ஒன்றிய செயலாளர்கள் முருகன், சிவகுமார், பிரின்ஸ், சிவகுமார், ஆசிர் சேம்ராஜ் ராஜேஸ், ரெத்தின சாமி, பேரூர் செயலாளர்கள் ஜெஸ்டின், ஜெகன், ரமேஷ், எட்வின் அஜித் பிரிட்டோ, குலசேகரம் அ.ம.மு.க. பேரூர் செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பிடி.செல்லப்பன் பேசியதாவது:-

    கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் காய்கறிகளின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டது. தக்காளி விலை ரூபாய் 200-ஐ தாண்டி விட்டது.அதனை கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    Next Story
    ×