search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் - கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    X

    குமரி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் - கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

    • குமரி மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் மாற்றப்பட்டனர்
    • எட்வர்ட் ராஜசேகர் விளவங்கோடு மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் தாசில்தார்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.

    திருவட்டார் தாசில்தாராக இருந்த தாஸ் தோவாளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஆதிதிராவிட தனி தாசில்தார் முருகன் திருவட்டார் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தோவாளை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாண்டியம்மாள் செண்பகராமன்புதூர் டாஸ்மாக் சில்லறை வணிக உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை தேசிய நெடுஞ்சாலை நிலமடுப்பு தனி தாசில்தார் விஜயகுமாரி நாகர்கோவில் ஆதிதிராவிட தனி தாசில்தாராக நிய மிக்கப்பட்டுள்ளார். விள வங்கோடு தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் சேகர் செண்பக ராமன்புதூர் டாஸ்மாக் கிட்டங்கி மேலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அணில் குமார் திருவட்டார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப் பட்டுள்ளார். திருவட்டார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் இசபெல் வசந்தி ராணி அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் துணை தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துணை தாசில்தார் பாலமுரளி கிருஷ்ணன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமை உதவியாளராகவும், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமை உதவியாளர் எட்வர்ட் ராஜசேகர் விளவங்கோடு மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டு உள்ளனர்.

    விளவங்கோடு மண்டல துணை தாசில்தார் ரியாஸ் அகமது விளவங்கோடு தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டுள்ளார்.

    Next Story
    ×