என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரம், குளச்சலில் இளம்பெண்-நர்சிங் பட்டதாரி பெண் மாயம்
    X

    பார்வதிபுரம், குளச்சலில் இளம்பெண்-நர்சிங் பட்டதாரி பெண் மாயம்

    • புன்னைநகரில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் முதியோர் இல்லம் திரும்பவில்லை.
    • விண்ணரசி (39) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் தேடி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சிலுவை ஸ்த்திரி (வயது 34). இவர் பார்வதி புரம் அருகே கிறிஸ்டோபர் காலனியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று புன்னைநகரில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் முதியோர் இல்லம் திரும்பவில்லை.

    இது குறித்து அவரது சகோதரி விண்ணரசி (39) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் தேடி வருகின்றனர்.குளச்சல் அருகே பத்தறை காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (53).இவரது மகள் ஷைனி (23).பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த ஷைனி திடீரென மாயமா னார். உடனே வீட்டினர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ராஜ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைனியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×