search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடலில் உள்ள மரணப் பாறையில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
    X

    கன்னியாகுமரி கடலில் உள்ள மரணப் பாறையில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

      கன்னியாகுமரி:

      கன்னியாகுமரியில் நேற்று முக்கடலும் சங்க மிக்க கூடிய திரிவேணி சங்கமத்தில் முன்னோர் களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று காலை முதலே லட்சக்கணக்கானோர் கன்னி யாகுமரி கடற்க ரைக்கு வந்திருந்தனர்.

      எனவே இந்தப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

      அப்போது மயிலாடி பகுதியை சார்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் குடிபோதை யில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு முக்கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது "திடீர்" என்று குடிபோதை யில் கன்னியாகுமரி கடலில் உள்ள மரண பாறையின் மீது ஏறி உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினான்.

      அப்போது பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சந்தோஷிடம் நைசாக பேசி உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன் வா என்று கூறி சந்தோஷை பாறையில் இருந்து இறங்க வைத்தனர். இறங்கிய பிறகு மீண்டும் தப்ப முயற்சித்த சந்தோஷை நீச்சல் அடித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

      அதன்பின்னர் போலீ சார் அவனிடம் விசாரித்த போது சந்தோஷ் குடி போதையில் பாறை மீது ஏறியது தெரியவந்தது. அதன் பின் கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார் சந்தோஷை எச்சரித்து அனுப்பினர்.

      சந்தோஷின் இந்த செயல் சிறிது நேரம் கன்னி யாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாலி பரை காப்பாற்றிய கட லோர பாதுகாப்புக்கு குழும போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

      Next Story
      ×