search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் நாளை முதல் வாக்காளர் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் நாளை முதல் வாக்காளர் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது

    • 1-1-2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.
    • அடுத்த மாதம் 8-ந்தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6A, 6B, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி 1-1-2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.

    எனவே 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக அடுத்த மாதம் 8-ந்தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6A, 6B, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும், தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் 26 மற்றும் 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    1-4-2023, 1-7-2023 மற்றும் 1-10-2023 ஆகிய தினங்களை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு பதிவு செய்ய சிறப்பு முகாமில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×