search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
    X

    தக்கலை அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    • வெகுநேரமாகியும் கீழே வராததால் தாய் பிரேமா மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணையில் நண்பர்கள்களுடன் ஊர் சுற்றுவதால் தாய் கண்டித்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே தாறா விளை திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வகுமார்.

    இவர் கேரளாவில் மரக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தெர்ஷா மோள் (வயது 16 )தெர்ஷா மோள் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி கூடம் சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வருவார். இதனால் பல முறை தாயார் பிரேமா கண்டித்துள்ளார்.

    இது போல நேற்றும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்து தாயார் கண்டித்தார். உடனே ஆவேசமாக தெர்ஷா மோள் வீட்டின் மேல்மாடிக்கு சென்று கதவை பூட்டியுள்ளார்.வெகுநேரமாகியும் கீழே வராததால் தாய் பிரேமா மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு பார்த்த போது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் தெர்ஷா மோள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர் தெர்ஷா மோள்பரி சோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக தந்தை மரிய செல்வகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் விசாரணையில் தினமும் நண்பர்கள்களுடன் ஊர் சுற்றுவதால் தாய் கண்டித்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார். என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×