search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
    X

    அருமனையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்

    • இறந்த நபர் திருமணம் ஆகாமல் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தார்.
    • அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    அருமனை அரசு மருத்துவமனை அருகில் பூட்டிய வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியது.

    அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஒருவர் பிண மாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த பகுதி கவுன்சிலர் சதீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர் உடனடியாக சம்பவ இடம் வந்து ஊர்மக்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது அந்த வீட்டில் வசித்து வந்த தாமோதரன் தான் பிணமாக கிடந்தவர் என தெரியவந்தது.

    தாமோதரனுக்கு திருமணம் ஆக வில்லை. தனியாக அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். பால் வெட்டும் தொழிலாளி யான இவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது. கவனிப்பாரற்ற நிலையில் இருந்தார். தன்னுடைய பணிகளை தானே கவனித்து கொள்வதாக தெரி கிறது. இது சம்மந்தமாக அருமனை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அருமனை போலீசார் சம்பவ இடம் வந்து அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அழுகிய பிணம் ஆனதால் தூக்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் கவுன்சிலர் சதீஷ் முன்னிலையில் களியல் சமூக சேவை குழுவை சார்ந்த சமூக சேவகர்கள் கிருஷ்ணன்குட்டி, ஜெரோம் மற்றும் புண்ணியம் சமூக சேவகர் அருண் ஆகியோர் பிணத்தை மீட்டு போலீசார் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×