search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே காவலாளிக்கு அடி- உதை
    X

    இரணியல் அருகே காவலாளிக்கு அடி- உதை

    • தொழிலாளி கைது
    • ரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்தினகுமார் (வயது 35) இவர் சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணி புரிகிறார்.

    சம்பவத்தன்று திங்கள் நகர் ரவுண்டானா அருகே வந்து கொண்டு இருந்தார்.அப் போது செய்யூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28) மற்றும் இருவர் மது போதையில் சந்தனகுமாரை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த சந்தனகுமார், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×