என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரியில் ரூ.6.76 கோடியில் சாலை பணிகள் - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
- தோவாளை தாழக்குடி சாலையில் ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பாலப்பணி
- அனைத்து பணிகளையும்- விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட நெடுஞ் சாலைத்துறையின் கீழ் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தோவாளை தாழக்குடி சாலையில் ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பாலப்பணிகளும், மருங்கூர் சாலை பகுதியில் நபார்டுதிட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறு பாலப்பணிகளும், அழகியபாண்டிபுரம் ஒருங்கிணைந்த உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளும், சித்திரங்கோடு சுருளோடு சாலை காயக்கரை பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் பாலப்பணிகளும் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
மேலும் குளச்சல்- திருவட்டார் சாலை வேர்கிளம்பி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மீட்புப்பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பில் நடை பெற்றுவரும் சாலை அகலப்படுத்தும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும்- விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை செயற்பொறி யாளர் பாஸ்கரன், அரசு ஒப்பந்ததாரர் கேட்சன், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






