search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப 53-வது ஆண்டு விழா
    X

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப 53-வது ஆண்டு விழா

    • 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு
    • சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் மற்றும் விவேகானந்த கேந்திர வித்யாலயா சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 53-வது ஆண்டு விழா, 1893-ம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா ஆகிய இருபெரும்விழா விவேகானந்தபுரம் விவேகானந்தகேந்திர வளாகத்தில் நடந்தது. கேந்திர உதவித்தலைவர் அனுமந்த ராவ் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா வரவேற்றுப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திராவில்10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும் கேந்திர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் விவேகானந்தர் கேந்திர வித்யாலயா பள்ளி உதவி முதல்வர் சஞ்சீவி ராஜன் நன்றி கூறினார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    Next Story
    ×