search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே ஆட்டோவில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே ஆட்டோவில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
    • சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர்

    கன்னியாகுமரி :

    வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ் குமார் கொண்ட குழு சிராயன்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோவை நிறுத்து மாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது.

    தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பின்னர் ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோவை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×