search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கடந்த 10 மாதத்தில் 36 ஆயிரத்து 290 வழக்கு;
    X

    நாகர்கோவில் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கடந்த 10 மாதத்தில் 36 ஆயிரத்து 290 வழக்கு;

    • அபராதத்தை கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு
    • ரூ.2 கோடியே 14 லட்சம் அபராதம் வசூல்

    நாகர்கோவில், நவ.2-

    குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீ சார் பல்வேறு நட வடிக்கை களை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன்க ளுக்குங பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வரு கிறார்கள். போக்கு வரத்து விதி முறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் தடுத்து நிறுத்தி போலீசார் அபரா தம் விதித்து வருகிறார்கள். கனிமவளங்களை அதி கமாக ஏற்றி வரும் லாரி களுக்கும் அபராதம் விதிக் கப்பட்டு வருகிறது. போலீ சாரின் இந்த சோதனையில் தினமும் 2000-க்கும் மேற் பட்டவர்கள் சிக்கி வரு கிறார்கள். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள்.

    பார்வதிபுரம், வடசேரி, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக பகுதிகளில் வாகன சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். அதிகாரம் ஏற்றி வரும் வாக னங்களுக்கும் அபரா தம் விதிக்கப்பட்டு வரு கிறது. ஹெல்மெட் அணி யாமல் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதுடன் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கும் அபராதம் விதித் துள்ளனர். குடிபோதை யில் வாகனம் ஓட்டியவர்களும் இந்த சோதனையில் சிக்கி உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் நாகர் கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலை யத்தில் மட்டும் போக்கு வரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.36 ஆயிரத்து 290 வழக்கு கள் பதிவு செய்யப்பட் டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 கோடியே 14 லட்சத்து 17 ஆயிரம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    10,267 வழக்குகளில் அபாரதம் விதிக்கப்பட்ட அபராத தொகையை கட்டாமல் உள்ளனர். இதன் மூலமாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் உள்ளது. இதை வசூல் செய்வதற்கான நட வடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகி றார்கள். அபராதம் விதிக் கப்பட்டவர்கள் உடனடியாக அபராத தொகையை கட்டா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இதேபோல் தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட் பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் அதை கட்டாமல் ஏராளமானோர் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அபராத தொகைகளை எப்படி வசூல் செய்யலாம் என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை யில் இறங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக பட்டி யல் தயாரிக்கப்பட்டு வரு கிறது. வட்டார போக்கு வரத்து அலுவலகம் மூ லமாக நடவடிக்கை எடுக்க லாமா? என்பது குறித்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×