search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே விடுதியில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்
    X

    இரணியல் அருகே விடுதியில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

    • மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா?
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தலக்குளம் பட்டரிவிளை யில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் பகுதி மாணவிகள் உட்பட பலர் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் விடுதியில் இருந்து திடீரென மாயமானார்கள்.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன அழுத்தம் காரணமாக மாணவிகள் வெளியே சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதுபோல் ஒரு மாணவர் வெளியே சென்று பின்னர் திரும்பவும் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×