search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே மது விற்ற 2 பேர் கைது
    X

    இரணியல் அருகே மது விற்ற 2 பேர் கைது

    • மோட்டார் சைக்களில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • சோதனையில் அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இரணியல் :

    இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இரணி யல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த னர். அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்களில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து அரசு அனுமதி இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நிஷாந்தை (வயது 24) கைது செய்தனர்.

    மேலும் அந்த வழியாக நடந்து வந்த மற்றொருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஒரு பையில் 10 மது பாட்டில்கள் அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் சதாசிவம்பிள்ளை (37) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×