search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2139 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.118 கோடி கடன் உதவி
    X

    2139 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.118 கோடி கடன் உதவி

    • தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4755 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 81 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 4914 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4755 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    2021-22-ஆம் ஆண்டில் 5600 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.448.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 10226 மகளிர் திட்டம் சார்ந்த மற்றும் பிற சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக ரூ.508.47 கோடி வங்கி நேரடி கடன் வழங்கப்பட்டது. மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 8594 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.550.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2139 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.118.00 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 81 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இக்கூட்டமைப்புகளில் 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டில் வங்கி பெருங்கடனாக ரூ.3.42 கோடி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டிற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.00 கோடி வங்கி பெருங்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதில் 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.63 கோடி பெருங்கடன் வழங்க கேட்டு வங்கிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் தொகையை முறையாக செலுத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தொகையில் ரூ.3 இலட்சத்திற்கான வட்டி மானியத்தில் 5% சுயஉதவிக் குழு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    சிறப்பாக செயல்படும் சிறப்பு குழுக்களான மாற்றுத்திறனாளிகள். நலிவுற்றோர் மற்றும் முதியோர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடன் பெறு வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டாரங்களில் தர மதிப்பீட்டு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தி சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் பெற்றுக் கொடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×