search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தலாம்
    X

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தலாம்

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்கா ளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காள ர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும்,ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணை க்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் ( VHA ) என்ற செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் .

    வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பிஅல்லது கருடா மொபைல் ஆப்பில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்கா ளர் உதவி மையம் மற்றும் இ - சேவை மையத்தினை அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம் .

    படிவம் 6 பிஅல்லது கருடா மொபைல் ஆப்பில் வாக்காளர் பெயர், வாக்கா ளர் அடையாள அட்டை எண், சட்டமன்ற தொகுதி, ஆதார் அட்டை எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் .

    ஆதார் அட்டை இல்லை யெனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட த்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை,தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, இந்தியக் கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

    2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பணிகள் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளதால் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதேனும் மறுசீரமைப்பு பணிகள் இருப்பின் அது குறித்த விபரத்தினை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர் ( சார் ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் ) தெரிவிக்க வேண்டும்.

    மேலும் படிவம் 6 , 7 மற்றும் 8 ஆகிய படிவங்களில் சிறிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×