குலசேகரம் அருகே ஒரே குலையில் 107 தேங்காய்கள்

சுமார் 150 தென்னை மரங்களை நட்டு தினமும் பராமரித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
குலசேகரம் அருகே ஒரே குலையில் 107 தேங்காய்கள்
Published on

திருவட்டார் :

குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி, தென்னை விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுமார் 150 தென்னை மரங்களை நட்டு தினமும் பராமரித்து வருகிறார். இந்த மரத்தில் இருந்து மாதந்தோறும் தேங்காய் வெட்டி விற்பனை செய்து வருகிறார். நேற்று தென்னை மரங்களில் இருந்து தேங்காய் வெட்டி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து வந்தார்.

அதில் ஒரு தென்னன மரத்தில் சுமார் 107 தேங்காய்கள் இருந்தன. அதில் ஒரு கிளையில் 7 தேங்காய்கள் இருந்தன. இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com