search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் நடவடிக்கை
    X

    குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் நடவடிக்கை

    • தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
    • கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த உத்தரவின்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அறிவுரையின் பேரில் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி மரம் வெட்டும் தொழில், விவசாய தொழிலில் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்துப்படுகிறார்களா? என்று எனது மண கண்ட பிரபு) தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் தக்கலை, திருவட்டார், ஆற்றூர் மற்றும் அழகிய மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடி மைகளாக பணிக்கு அமர்த்து வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற எண்ணிலும் புகார் தெரி விக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×