search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    அனில்குமார்

    குழித்துறை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய அனில்குமாரின் காலை பிடித்து தாயார் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
    • களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே கொல்லக்குடிவிளை பகுதி யை சேர்ந்தவர் அனில் குமார். இவர் வெளி நாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கொரோனா தொற்றுக்கு முன் ஊருக்கு வந்தவர். பின்னர் வெளி நாட்டுக்கு செல்லாமல் இப்போது ஊரில் உள்ளார். இவருக்கு திருமணம் ஆக வில்லை. இவர் தாயாருடன் குழித்துறை பகுதியில் வசித்து வருகிறார். இவ ருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவே இல்லை. இத னால் அனில்குமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு அனில் குமார் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். இன்று காலை அவரது அறை கதவு திறக்கப்பட வில்லை. இதனால் அவரது தாயார் அனில்குமாரை கதவை திறக்குமாறு அழைத்தார்.நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்தபோது அனில்குமார் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். அனில்குமாரின் காலை பிடித்து தாயார் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. அனில்குமார் தற்கொலை செய்து கொண் டது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    களியக்காவிளை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×