என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழியில் ஆட்டோ மோதி தொழிலாளி பலி
- ஆரல்வாய்மொழி போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
- பலியானவரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46). செங்கல்சூளை தொழிலாளி. இவர் நேற்று மாலை பஞ்சாயத்து அலுவலகம் முன்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று பெருமாள் மீது மோதியது.
இதில் பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த பெருமாளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் முருகன் ஆரல் வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளனர். பலியான பெருமாளுக்கு மல்லிகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்