என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் சிறப்பு பணிவிடை
கன்னியாகுமரி:
புத்தாண்டையொட்டி சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபட்டனர்.
இதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு சரவிளக்கு ஏற்றி சங்குநாதம் முழங்கி மேளதாளங்கள் முழங்க திருநடை திறக்கப்பட்டது. தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைவருக்கும் புத்தாண்டு கைநீட்டம், இனிப்புகள், தர்மங்கள் வழங்கப்பட்டது.தலைமைபதி
குரு. பாலஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்து செய்தி மற்றும் அய்யாவழி நெறிமுறைகள் குறித்து பேசினார். குருமார்கள் பால லோகாதிபதி, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், பையன் நேம்ரிஸ், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை பொதுச்செயலாளர் கிருஷ்ணமணி, மகாராஷ்டிர மாநில தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யாவை வழிபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்