search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது
    X

    லெமூர் கடற்கரையில் குவிந்து இருந்த பொதுமக்கள்.

    காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது

    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

    பொங்கலிற்கு முதல் நாள் போகி மறுநாள் தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், 4-ம் நாள் கொண்டா டப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா ஸ்தலங்களில் குவிவது வழக்கம். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங் களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் சுற்றுலா ஸ்தலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி கடற்க ரையில் இன்று காலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். சூரிய உதயத்தை காண வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.இதேபோல் சொத்தவிளை கடற்கரையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர். இதனால் கடற்கரை முழு வதும் கூட்டம் அதிக மாக இருந்தது.மாலை நேரத்தில் கூட்டம் அதிக மாக வரும் என்பதால் அங்கு கண்காணிப்பு பலப்ப டுத்தப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதை யடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அருவியின் மேல் உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.மாத்தூர் தொட்டில் பாலம், வட்டக்கோட்டை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. புதுமண தம்பதியினர் ஏராளமானோர் குடும்பத் தோடு சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்தனர்.

    Next Story
    ×