search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை
    X

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை

    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை

    • வனத்துறையினர் மீட்டனர்
    • கப்பலில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நேற்று மாலை ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார், வன காவலர் ஜோயல்ஆகியோர் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த ராட்சத கடல் ஆமையை மீட்டனர்.

    அந்த கடல் ஆமை சுமார் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அந்த ஆமையின் மேல் பகுதியில்உள்ள ஓடு கருப்பு நிறத்திலும் அடிப்பகுதி இளம் மஞ்சள் நிறத்திலும் காணப்பட்டது. கப்பலில் அடிபட்டு அந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிஇருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

    Next Story
    ×