என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மனுக்கு சிறுமி அபிஷேகம் செய்த காட்சி.
ஓசூர் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த சிறுமிகள்
- அபிஷேக நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் பெற ஆயுஷ் ஹோமங்களும் நடத்தப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் பாரதிதாசன் நகரில் ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், சிறு குழந்தைகள் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்
13-வது ஆண்டாக
சிறு குழந்தைகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 6 மாத கைக்குழந்தை முதல் ஏழு வயது சிறுமிகள் வரை அம்மனுக்கு பால், தயிர், குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம், ஆகிய பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர்.அபிஷேக நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் பெற ஆயுஷ் ஹோமங்களும் நடத்தப்பட்டது. குழந்தைகள் கல்வியிலும், கலை வளர்ச்சியிலும் சிறந்து விளங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் பிரச ன்னம் பார்க்கப்பட்டு இந்தியாவிலே முதல் முறையாக இந்த கோயிலில் குழந்தைகள் மூலம் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.






