என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
- காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், அதகப்பாடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது, 3-ம் தேதி சாமி ஜம்பு நிகழ்ச்சியும், 4-ம் தேதி தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கரக வேடிக்கை நிகழ்ச்சி மற்றும் செல்லியம்மன் பட்டாளம்மன் அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9-ம் தேதி விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், 10-ம் தேதி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில் அதகப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று பந்தகாசி நிகழ்ச்சியோடு கோவில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்