search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்- 2 தேர்வில் கலைவாணி மெட்ரிக் பள்ளி  சாதனை
    X

    சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    பிளஸ்- 2 தேர்வில் கலைவாணி மெட்ரிக் பள்ளி சாதனை

    • பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 மாணவர்கள் 550-க்கு மேல், 68 மாணவர்கள் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்ட அளவில் 3-ம் இடமும், சங்கரன்கோவில் தாலுகா அளவில் முதலிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். மாணவி பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக தமிழ்-98 ,ஆங்கிலம்-97, இயற்பியல்-99 மற்றும் வேதியியல் ,உயிரியல் ,கணிதம் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மாணவி பிரீத்தி வர்ஷினி 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். பாடவாரியாக மாணவி பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-97, உயிரியல்-99, கணிதம்-99, இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி யாமினி பிரியா மற்றும் பிரவீன் குமார் இருவரும் 600-க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3-ம் இடம் பெற்றுள்ளனர். பாட வாரியாக முதல் மதிப்பெண் தமிழ்-98, 4 பேர் ஆங்கிலத்தில் 97 மதிப்பெண், 7 பேர் கணிதத்தில் 100-க்கு100 , ஒரு மாணவர் இயற்பியலில் 100-க்கு100 மதிப்பெண், 2 பேர் வேதியியலில் 100-க்கு100 மதிப்பெண், 10 பேர் உயிரியியலில் 100-க்கு100 மதிப்பெண், ஒரு மாணவர் வணிகவியலில் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் பொன்னழகன்,ஆசிரியர்கள், ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×