search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுரண்டையில் கலைஞர் கோட்டம் திறப்பு
    X

    விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் பேசியபோது எடுத்த படம். அருகில் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுரண்டையில் கலைஞர் கோட்டம் திறப்பு

    • ஊர்வலமாக சென்ற தி.மு.க.வினர் சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கலைஞர் கோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தென்காசி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுரண்டையில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெற்றது.

    முன்னதாக சுரண்டை பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊர்வலமாக சென்ற தி.மு.க.வினர் சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து சங்கரன்கோவில் ரோட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தை தென்காசி தெற்கு மாவட்ட பொறுப் பாளர் ஜெயபாலன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்து அங்கிருந்த கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், செல்லத்துரை,ரவிசங்கர், அழகு சுந்தரம், சீனித்துரை, ராமச்சந்திரன், வெற்றி விஜயன், பெரியதுரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ்,

    ஒன்றிய தலைவர்கள் தென்காசி சேக் அப்துல்லா, துணை தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன், ஆலங் குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேல் , தொழிலதிபர் மணிகண்டன், வீராணம் சேக், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னறிவழகன், சாம்பவர் வடகரை மாறன், கீழப்பாவூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லப்பா, வக்கீல் ஏ.பி. அருள், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், தங்கச்சாமி,

    கல்லூரணி முன்னாள் ஊராட்சி தலைவர் அருணோதயம், நாராயண சிங்கம், கல்லூரணி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மாணவரணி ரமேஷ், மேல பட்ட முடையார் புரம் ராமராஜ், குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர் குட்டி, தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில் நுட்ப துணை அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணா, வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, ஆவின் முருகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×