என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் பைரவ நிலையத்தில் காலபைரவாஷ்டமி விழா தொடக்கம்
- 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடந்தது.
- திருமுறை ஒப் புவித்தல் போட்டியுடன் விழா நிறைவடைகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கந்திகுப்பம் பகுதியில் உள்ள பைரவ நிலையத்தில் 16-ம் ஆண்டு காலபைர வாஷ்டமி விழா நேற்று பைரவநாத சுவாமிகள் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, பேராசிரியர் தனராசு சொற்பொழி வாற்றினார். மாலை விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இன்று 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடக்கிறது.
நாளை (30-ம் தேதி) திருமுருகன் தீந்தமிழ் வேள்வி, 1-ம் தேதி சொர்ணகர்ஷண பைரவர் வேள்வி, வீதி உலா, 2-ம் தேதி முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம், 3-ம் தேதி திருக்கல்யாணம், 4-ம் தேதி சிறப்பு அபிஷேகம்-இசை சொற்பொழிவு, 5-ம் தேதி உக்ர காலபைரவருக்கு தீத்தமிழ்வேள்வி, அபிஷேகம், பால்குட ஊர்வலம் நடக்கிறது.
வரும் 6-ம் தேதி, வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, 7-ம் தேதி திரிபுரிபை ரவி அம்மன் உடனமர் பைரவநா தப்பெருமான், ஆடல் வல்லானுக்கும் சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு திருமுறை விண்ணப்பம், உரியடித்தல் போட்டி, திருமுறை ஒப் புவித்தல் போட்டியுடன் விழா நிறைவடைகிறது.
இது குறித்து பைரவ நிலை யத்தின் பைரவநாத சுவா மிகள் கூறுகையில், 'விழா நடைபெறும் 10 நாட்களும் பக்தர்களுக்கு 3 வேளையும் அறுசுவை உணவு வழங் கப்படும். விழாவினை யொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது,' என்றார்.






