search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 

    கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ மனோன்மணி சமேத கைலாசநாதர் கோவில் உட்பட ஏழு கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, பிம்பசுத்தி ரக்ஷா பந்தனன், நாடி சந்தானம், தத்துவச்சாரணை, ஸ்பரிசாஹூதி, திரவியா ஹூதி, மகாபூர்ணா ஹூதி, யாத்ரா தானம், கிரகப்பிரிதி அனைத்து ஆலயங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ சீதலா தேவி மாரியம்மன், ஸ்ரீ மன்மத சுவாமி கோயில், ஸ்ரீ கூந்தாளம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதர் ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆச்சாரிய உற்சவம், எஜமானும் உற்சவம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடு துறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக குழுத்தலைவரும், மாவட்ட திமுக துணைத்தலை வருமான மு. ஞானவேலன் உள்ளிட்ட 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பெரும்பள்ளம் கிராம வாசிகள் செய்தனர்.

    Next Story
    ×