search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணும் பொங்கல்: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    காணும் பொங்கல்: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • இத்திருக்கோயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் சிறப்பு பெற்ற முருகன் திருத்தலம் ஆகும். தொடர்ந்து ஆறு வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து விளக்கேற்றினால் வீடு, மனை, உத்தியோகம், தொழில், திருமணம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், இத்திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு

    கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி மண்டலபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இந்த கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் விடியற்காலை முதலே கோவில் வளாகத்தில் வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர்.

    இந்நிலையில், இன்று காணும் பொங்கல் மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு

    பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வாகனத்தில் வந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். எனவே, விழாக் காலங்களில் போதிய அளவு போலீசாரை நியமித்து பக்தர்களுக்கு போதிய வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×