search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாய்ப்பு உருவாக்கும்   திட்டத்தில் தொழில் தொடங்க மானியம்
    X

    வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க மானியம்

    • தொழில் முனைவோர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்காண புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இணையதள முகவரியில் விண்ண ப்பிக்கு ம்படி கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவா க்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி உதவியினைப் பெற்று புதியதாக தொழில் தொடங்க ஆர்வம் மிக்க தொழில் முனைவோர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்காண புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திட்டத்தில் இந்த நிதிஆண்டு முதல் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான திட்டங்களும், சேவைத் தொழில்களுக்கு, ரூ.20 லட்சம் வரையிலான திட்டங்களும் அனுமதிக்கப்படும்.

    18 வயது பூர்த்தி அடைந்த படிக்காதவர்களும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறா தவர்களும் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம்.

    உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் திட்ட மதிப்பீடு இருந்தால் பயனாளி குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ரூ.2 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு பயிற்சி தேவையில்லை. ரூ.5 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு 5 நாட்களும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு 10 நாட்களும் நேரடியாகவோ இணையதளம் வாயிலாகவோ பயிற்சி பெற வேண்டும்.

    இம்மாவட்டத்திற்கான 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கு மாவட்ட தொழில் மையத்திற்கு 201 நபர்களுக்கு 585 லட்சம் மானியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்திற்கு 38 நபர்களுக்கு 110 லட்சம் மானியம், காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கு 74 நபர்களுக்கு 90 லட்சம் மானியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தொழில் துவங்க ஆர்வ முள்ள தொழில்முனைவோர் கீழ்கண்ட இணையதள முகவரியில் விண்ண ப்பிக்கு ம்படி கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதியுடைய வையா கவும் தக்க ஆவணங்களு டனும் இரு ப்பின் பரிசீலனை க்குப்பின் இணையதளம் வாயிலாகவே வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். இணையதள முகவரி: www.kviconline.gov.in/pmegp

    மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியிலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகவும். தொலைபேசி எண்: 04342 230892, 89255 33941, 89255 33942, 89255 33940 ஆகிய தொலைபேசி எண்களிலும் அழைக்கலாம். இத்தி ட்டத்தின் மூலமாக ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×