search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்து 5 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை
    X

    அடுத்தடுத்து 5 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

    • நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    கோடை விடுமுறையையொட்டி பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம கும்பல் வீடு புகுந்து நகை-பணத்தை சுருட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளை கும்பல் அள்ளி சென்றுவிட்டனர்.

    காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்ஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் டேனியல். இவர் கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது.

    சுதர்சன் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் 8 பவுன் நகை, லேப்டாப்பை சுருட்டினர். ஆசிரியர் தமிழரசு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது.

    இதேபோல் மேலும் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று உடனடியாக தெரியவில்லை.

    நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் நள்ளிரவு 1.30 மணியளில் கையுறை அணிந்தபடி கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அனைத்து வீடு களிலும் ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    Next Story
    ×