என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
- முனுசாமி மகள் நதியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
- நகை கொள்ளை குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி . விவசாயி. இவரது மகள் நதியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் முனுசாமி கிடாவெட்டி விருந்து அளித்தார். பின்னர் இரவு அனைவரும் தூங்கி விட்டனர். அப்போது அவர்கள் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






