search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் நகை-பணம் திருட்டு
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டியில் நகை-பணம் திருட்டு

    • ஆண்டிப்பட்டி அருகே வீட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம்ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 54). இவருடைய தாய் முத்தம்மாள், தந்தை வடிவேலு ஆகியோர் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அவர்களது வீட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து வேல்ராஜ் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×