search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநெல்வேலியில் நடைபெறும்  மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்ளவேண்டும்  -ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
    X

    திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்ளவேண்டும் -ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

    • கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.
    • மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் வரும் 27 ந் தேதி தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. 13- வது மாநாடு சிறப்பாக நடத்துவது என்றும், டிசம்பர் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட பொரு ளாளர் முருகன்,மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனன், மாவட்ட துணைச்செயலாளர் நடராஜன், போக்குவரத்து மண்டல தலைவர் ரவி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கந்த சாமி, கட்டுமானசங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி,விசைத்தறி மாவட்ட செயலாளர் சாமிநாதன், உள்ளாட்சி மாவட்டத்தலைவர் மனோகரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×