என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் நாளை நடக்க இருந்த கடை அடைப்பு போராட்டம் வாபஸ்
Byமாலை மலர்28 Nov 2022 5:51 AM GMT
- நாளை நடக்கவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
- ஜி.எஸ்.டி வரி, அதிகாரிகளால் வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கக் கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நாளை நடக்கவிருந்த கடை யடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
ஜி.எஸ்.டி வரி, அதிகாரிகளால் வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கக் கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர் சங்கங்கள் சார்பில் நடக்க விருந்த இந்த கடையடைப்பு போராட்டம், மாநில தலைவர் அறிவுறுத்தல்படி வாபஸ் பெறப்படுகிறது.
மேலும் சேலம் மாவட்ட சரக்கு சேவை வரி இணை கமிஷனரை சந்தித்து, குறை களை மனுவாக கொடுத்து அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X