search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துரைப்பாக்கத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் பரிதாப சாவு
    X

    துரைப்பாக்கத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் பரிதாப சாவு

    • தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை அருகே பள்ளிக்கரணை, ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் புவனேஷ். (வயது 27).

    இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் ஆக இரண்டறை ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக மதியம் 3.30 மணி அளவில் பணிக்கு வந்து இரவு 1:30 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் மதியம் 3.30 மணிக்கு பணிக்கு வந்தார், இவருடன் நாக வெங்கட சாய் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    நேற்றுஇரவு 12 மணியளவில் சிகரெட் பிடிப்பதற்காக அவர் வேலை செய்யும் பத்தாவது மாடியில் இருந்து உடன் வேலை செய்யும் நண்பர் நாக வெங்கடசாய் இருக்கும் கீழ் தளத்திற்கு வந்தார். இருவரும் புகை பிடித்தவாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சிகரெட் புகைத்து விட்டு மீண்டும் மேலே வேலை செய்யும் இடத்திற்கு புவனேஷ் சென்றார். சற்று நேரத்தில் யாரோ மேலிருந்து கீழே விழும் சப்தம் கேட்கவே பணியாளார்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது புவனேஷ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்தனர். கீழே விழுந்ததில் அவரது தலை சிதைந்து, கைகள் உடைந்து துண்டாகி இறந்து கிடப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் இரவு ரோந்தில் அலுவலில் இருந்த தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்து போன நபர் சுமார் 10லட்சம் ரூபாய் வரை வங்கி மூலம் கடன் வாங்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

    Next Story
    ×