என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருளப்பட்டி ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- இருளப்பட்டி திருப்பாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
- ஞாயிற்றுகிழமை மங்கள இசை முழங்க கலசப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி திருப்பாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மகா கணபதி சிறப்பு ஓமம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றது.
தொடர்ந்து நான்கு நாட்களாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுகிழமை மங்கள இசை முழங்க கலசப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோபுரமுலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அரியாஞ்செட்டி, சின்னாஞ்செட்டி, சஞ்சீவிசெட்டி, குண்டன்செட்டி, குருகன்செட்டி குடும்பத்தினர். திருவிழா குழுவினர் சீனு ரவி, தரணிதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துயிருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கலச ஊர்வலம் நடைபெற்றது.
Next Story






