search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு
    X

    கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு

    • கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
    • தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடைபெற்ற கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணி நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

    இது குறித்து பல்லடம் தாசில்தார் நந்தகோபால் கூறியதாவது:- கிராம உதவியாளர் தேர்விற்கு 306 பேர் தேர்வு எழுதினர்.

    அவர்களுக்கான நேர்முகத்தேர்வு, தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. வரும் 10ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×