search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தீவிரம்
    X

    கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்த போது எடுத்த படம்.

    நாங்குநேரி அருகே கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தீவிரம்

    • கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • இந்த நிலங்களை மீட்பதற்காக நிலங்களை அளவீடு செய்து கல் பதிக்கப்பட்டு வருகிறது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா விற்குட்பட்ட ஆழ்வார் திருநகரி யில் ஏகாந்தலிங்க சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, திருமலாபுரம் கிராமத்தில் உள்ளது.

    ஆனால் இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் கோவிலுக்குரிய குத்தகை தொகைகளை செலுத்து வதில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற் கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உத்தரவின் பேரில், தனி தாசில்தார் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித், பேஸ்கார் முத்துராஜா, அளவையர்கள் ஜெகன், முத்துசெல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருமலாபுரத்தில் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் இப்பகுதியில் கோவிலுக்கு சொந்தமாக 1,010 ஏக்கர் நிலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலங் களை மீட்பதற்காக நிலங் களை அளவீடு செய்து கல் பதிக்கப்பட்டு வருகிறது. 900 ஏக்கர் நிலங்கள் கண்டறி யப்பட்டு, கல் நடப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள நிலங்களை கண்டறிய அளவீடு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அளவீடு பணிகள் முடிந்த பின் நிலங்கள் மீட்கப்படும் என்றும் அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×