search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

    • எப்.எஸ்.எஸ்.ஏ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லா குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் 2 குடிநீர் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • சந்தேகத்திற்கிடமான 2 கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்கள், மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பகுப்பாய்வுக்கூடத்திற்கு.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் ேபரில் உணவுப்பாது காப்பு மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், ஒசூர் உணவுப்பாது காப்பு அலுவலர் முத்து மாரியப்பன், தளி உணவு ப்பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் சூளகிரி உணவுப் பாது காப்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழு, ஓசூர் ஒன்றியத்து க்கு உட்பட்ட நஞ்சாபுரம், கொத்த கொண்டபள்ளி,ஒசூர் தர்கா மற்றும் தளி ஒன்றிய ப்பகுதியை சேர்ந்த தளி, பேளகொண்டபள்ளி, அரசகுப்பம் ஆகிய இட ங்களில் திடீர் ஆய்வு மே ற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எப்.எஸ்.எஸ்.ஏ மற்றும் ஐஎஸ்ஐ அனுமதி பெறாமல், பாதுகாப்பில்லா குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் 2 குடிநீர் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் சந்தேகத்திற்கிடமான 2 கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்கள், மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பகுப்பாய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.ஆய்வறிக்கையின் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட குடிநீர் கம்பெனி உரிமையாளர்க ள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×