என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனி ரணகாளியம்மன் கோவில் அருகே சேதம் அடைந்துள்ள சாலை.
பழனியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
- பழனி உடுமலை சாலை வளைவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கடந்த சில நாட்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
- இதனால் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
பழனி ரணகாளியம்மன் கோவில் அருகே நால்ரோடு பகுதி உள்ளது. நகர் பகுதியில் முக்கிய சந்திப்பாக விளங்கும் இந்த நால்ரோடு பகுதியில் பழனி- தாராபுரம், பழனி-உடுமலை, பழனி நகர் உள்ளிட்ட சந்திப்புகள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இங்கு பழனி உடுமலை சாலை வளைவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நால்ரோடு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பழனிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






