search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக பட்ஜெட்- செங்கல்பட்டு உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
    X

    தமிழக பட்ஜெட்- செங்கல்பட்டு உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

    • சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.
    • ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில் 7 மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் நீட்சியாக ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×