என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
- இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
ஒகேனக்கல்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது.
ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. பரிசலில் பயணம் மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியில் விழும் தண்ணீரை பார்த்து ரசித்தனர். பின்னர் இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.






